ஆகஸ்ட் 15 விடுமுறை நாள்! +18(சிறுகதை)

>> Monday, October 14, 2013

ஆகஸ்ட் 15 காலை 9.05

கீதா பாண்ட்ஸ் பவுடரை கை நிறையக் கொட்டி உடல் முழுவதும் பூசிக் கொண்டாள், குளித்து முடித்த அடையாளமாக சோப்பு வாசம் பவுடருடன் கலந்து ஒரு மாதிரியாக வீசியது. எதிரே பார்த்தாள்... நைட்டிகளுடன் மாலதியும், சாவித்திரியும் அந்த அறையில் இருந்த ஒரு பழைய கட்டிலில் உக்காந்திருக்க அதே கட்டிலில் படுத்தபடியே சாந்தி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தாள்....

"என்னடி கீதா பவுடர் வாசத்திலியே கஸ்டமர பீஸ் போக வச்சு....வேலைய ஈஸியா முடிச்சுக்கலாம்ன்னு ஐடியா பண்ணிட்டியா? உடம்பு பூரா பூசற..." என்றாள் மாலதி!

"அட போக்கா....இரண்டு நாளாச்சு கஸ்டமர் வந்து பத்து பைசா வருமாணமில்ல.... நாலு பேரும் தண்டத்துக்கு உக்காந்துட்டு இருக்குறோம்...இனி இந்த பாபுவ நம்பி வரமாட்டேன். போன வாரம் பாண்டிச்சேரியில தினம் பத்து கஸ்டமர்க்கு மேல வந்தாணுக தண்ணியடிச்சது...சாப்ட்டது போக பத்தாயிரம் கெடைச்சது சரி ஒரே ஊர்ல இருந்தா கஸ்டமர் சலிச்சுடுவாங்க... அப்படின்னு இந்த ஊருக்கு வந்தா பத்துப் பைசா பிரயோஜனமில்ல...!"

"ஆமா கீதா சொல்றதும் சரி இந்த பாபுவ நம்பி இங்க வந்தது தப்பு" இது சாந்தி!

"போங்கடி பாபு நல்ல பார்ட்டி! அவன் கையில ஏகப்பட்ட கஸ்டமர் இருக்கு...போன வருசம் நான் வந்தப்ப வேற ஏரியாவுல வீடு இருந்தது. இது புது ஏரியா, வந்து ஒரு மாசம்தான் ஆகுது! மெல்ல...மெல்லத்தான் கஸ்டமர் வருவாங்க...."என்றாள் மாலதி!

"ஆமாக்கா ஏன்...? பாபு அங்க இருந்து மாறுச்சு...!"

"அதையேண்டி கேட்குற பாவம்...! ஸ்டேசன்ல இருந்து மாமுலுக்கு ஏட்டு வந்திருக்கான், மாமுல் வாங்கிட்டுப் போனவன்...நேரா சீட்டு வெளையாடி பணத்தை வுட்டுட்டான். இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கல! அமுக்கமா இருந்துட்டான், கடுப்பான இன்ஸ்பெக்டரு இருந்த நாலு பீசையும் குறுக்கு உடைய மிதிச்சு இழுத்துட்டு போயி கேஸப் போட்டுட்டான். பாபு ஒரு லட்சத்துக்கு மேல செலவு பண்டி, பீஸையும் காப்பாத்தி ஆஸ்பத்திரி செலவும் வேற பண்டியிருக்காப்ல....அதனால காசு மொடையில இருக்கறாப்ல.....அதனால ஏரியா மாறிட்டாப்ல இந்த ஏரியா இன்ஸ்பெக்டரு பாபுக்கு நல்ல பழக்கம்! அதனால பிரச்சனை வராது.....!"

ஆகஸ்ட் 15 காலை 10.30

பாபு அந்த அறைக்குள் நுழைந்தான். "இன்னிக்கு என்ன கருமம் ஒரு கஸ்டமரும் போனை எடுக்க மாட்டிங்கறான், இன்னிக்கு பழிவாங்கிரும் போல.....!" என்று சலித்தபடி ஹோட்டலில் வாங்கி வந்த பார்சலை வைத்தான். பான்பராக் சரத்தை கிழித்து ஆளுக்கு நாலு கொடுத்தான், காண்டம் பாக்கெட்டை எடுத்து வேட்டியைத் தூக்கி டவுசர் பாக்கட்டில் போட்டுக்கொண்டான்.

"இத்தோட காலி! பத்து பைசா கையில இல்ல இப்பத்திக்கு சாப்பிட்டுக்கங்க... இனி எவனாவது கஸ்டமரைப் புடிக்குறேன் நைட்டு சரக்கோட சாப்புட்டுக்கலாம்" என்றபடி பீடியை பற்ற வைத்து உறிஞ்சினான் நால்வரும் பார்சலைப் பிரித்து இட்லியை சாப்பிடத் தொடங்கினார்கள்.

பாபு பீடியை உறிஞ்சிக் கொண்டே செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்...

"ஹலோ பாஸூ...! எப்படியிருக்கீங்க....? நான் பாபு பேசறன்...!"

"......................................"

"எந்த பாபுவா...? ஆந்திரா பார்ட்டி ஞாபகம் இல்லைங்களா பாஸூ குமரன் நகர்ல......ஹிஹி!"

"....................................."

"என்ன பாஸூ அனுஸ்கா மாதிரி இருக்குதுன்ட்டு மறந்துட்டிங்களே....?"

"....................................."

"நாளைக்கு வர்றீங்களா...? பீஸ் போயிரும் பாஸூ! கேரளா புது ஐட்டம் இன்னிக்கே வாங்க...!"

"...................................."

"ஓ..........அப்படிங்களா பாஸூ! சரி தோது போல வாங்க...!"

போனை வைத்தவன் "இன்னிக்குன்னு பாத்து கையில பத்துக் காசு இல்ல...ச்சே...எழவெடுத்தவனுக எவனும் வரமாட்டிங்கிறான்...! போன் பண்டி...போன் பண்டியே....இருந்த காசு பூராவும் போச்சு......" என்று சலித்தபடி முன்னறையில் இருந்த டிவியை உயிர்ப்பித்து டிவி பார்க்கத் தொடங்கினான்.

ஆகஸ்ட் 15 மதியம் 12.30

"பாபுண்ணே.....டீயும்...பன்னுமாது வாங்கிட்டு வாண்ணே....எங்காவது கடஞ்சொல்லி! பாக்குப்போட்டு....பாக்குப் போட்டு வாயெல்லாம் ஒரு மாதிரி இருக்கு அந்த கீதா புள்யையப் பாக்க பாவமா இருக்கு, தண்ணிய....தண்ணிய...மோந்து குடிக்குது. பாக்கு போடுற பழக்கமும் வேற இல்ல....."என்றாள் மாலதி!

"மாலு இது புது ஏரியாம்மா.....யாருகிட்டியும் இன்னும் பழகலை! கடையும் முக்குல ஒரே...ஒரு...பேக்கரிதான் இருக்கு அவனும் கடந்தரமாட்டான்...பாப்போம் சாயங்காலம் எவனாவது வருவான்." தூங்கிக் கொண்டிருந்த சாந்தி விழித்துப் பார்த்து விட்டு மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டாள் நேற்று அடித்த சரக்கு வேறு வயிற்றை பயங்கரமாக எரித்தது.. வாயில் புளிச்ச உமிழ் நீர் அடிக்கடி வந்தது!

ஆகஸ்ட் 15 இரவு 7.30

முன்னறையில் டிவி ஓடிக் கொண்டிருக்க நால்வரும் பசி மயக்கத்தில் படுத்தே கிடந்தனர்....பாபுவின் போன் அடித்தது. கடுப்பாக போனை எடுத்த பாபு "சுதா" என்ற பெயரைப் பார்த்ததும் மலர்ந்தான்...!

"ஹலோ...! சொல்லு...!"

"....................."

"அட ஏம்மா நீ வேற, காலையில நாலு இட்லி தின்னது ஒரு கஸ்டமரும் வரலை எல்லாம் இன்னிக்கு என்ன பொட்டையாயிட்டானுகளா...?"

"......................"

"அப்படியா செரி ரொம்ப டேங்ஸ் சுதா! நீ பார்ட்டிய ஒரு ஆட்டோப் பிடிச்சு கூட்டிட்டு வந்துரு... வீடு தெரியுமில்ல....?"

"......................"

"ஆமாம் அங்கதான் பேக்கரிய ஒட்டிய சந்து...!"

போனை வைத்த பாபு நால்வரையும் பார்த்தான் "கண்ணுகளா....எழுந்திருங்க மூஞ்சிய கழுவிட்டு பிரஷ்சா ரூம்ல போய் இருங்க....இன்னிக்கு நைட்டு சாப்பாடு கிடைச்சிருச்சு...!"

ஆகஸ்ட் 15 இரவு 8.30

ஒரு அரைமணி நேரத்தில் ஒரு அரவாணியும் ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க வயதானவர் டக்இன் செய்து, கண்களில் குளிர் கண்ணாடி போட்டு டிப்டாப்பாக இருந்தார் முடிக்கு டையடித்தும் ஆங்காங்கே வெள்ளை தெரிந்தது. இருவரும் ஆட்டோவை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். பாபு காதுவரை வாய் கிழிய சிரித்தான்....சுதாவைப் பார்த்து 

"என்ன பாபு மாமா! நாலு பீஸ் வெச்சு ஜாம்....ஜாம்ன்னு இருக்கேன்னு சொன்னாங்க...புரோட்டாவுக்கு வழியில்லாம இருக்கறேங்கிறீங்க..."என்று சொல்லி சத்தம் வர படக்கென்று கை தட்டிச் சிரித்து பாபுவை கட்டிப்பிடித்து கண்ணத்தைக் கிள்ளி ஒரு முத்தம் வைத்தது.

இருவரின் அன்யோனியத்தைப் பெரியவர் வியப்பாக பார்த்தார்.

"பாபுமாமா பெரிசு நம்ம கஸ்டமர்தான்... பெரிய மனுசன் பொண்டாட்டிச் செத்து ரொம்ப வருசம் ஆச்சு...நம்ம கிட்டத்தான் அடிக்கடி வரும், நல்ல ஆளு ரொம்ப நாளா குட்டிககிட்ட போகணும்ன்னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு, இன்னிக்கு கறாரா வேணும்ன்னுட்டு ஒரே அடம் புடிச்சுது. எனக்கு உம்பட ஞாபகம் வந்துச்சு போனை பண்ணிக் கேட்டுட்டு கூட்டிட்டு வந்துட்டேன்" என்று பாபுவை அணைத்துக் கொண்டே கடவாயைப் பிடித்தபடி சொல்லியது சுதா!

"வாங்க பெரிசு" என்று நால்வர் இருந்த அறைக்கு கூட்டிக் கொண்டு போனான் பாபு....பெரியவர் நால்வரையும் ஒரு பத்து நிமிடம் மாறி....மாறிப் பார்த்தார்....கீதாவை கைகாட்டினார். மாற்ற மூவரும் அறையை விட்டு வெளியேற பாபு டவுசர் பாக்கட்டில் இருந்த காண்டத்தை பிரித்து இரண்டு பாக்கெட்டை கீதாவிடம் கொடுத்து விட்டு சுதாவும் பாபுவும் பெரியவரை உள்ளே விட்டு விட்டு வர கதவை சாத்தப்பட்டது. 

அனைவரும் முன்னறையில் வந்து அமர்ந்து டிவி பார்த்தார்கள்......ஒரு மணிநேரம் கழிந்து பெரியவர் பேண்ட் ஜிப்பைப் போட்டுக் கொண்டு சட்டையைப் போட்டுக் கொண்டு முன்னறைக்கு வந்தார்....

ஆகஸ்ட் 15 இரவு 9.30 

"சுதா பெரியவரிடம் கண்ணடித்தபடி... என்ன பெரிசு எப்படி கம்பனி?" என்றது.

"சூப்பர்....!"

"இனி என்னை மறந்துருவே பெரிசு!"

"ராஜாத்தி உன்னை நான் மறப்பேனா...?" என்று சுதாவை அணைத்து கண்ணத்தில் முத்தமிட்டது.

"ஆயிரம் ரூபாயை எடுத்து பாபுவிடம் கொடுத்தது. பாப்பாவுக்கு தனியா டிப்ஸ் கொடுத்துட்டேன்.....நீ எழுநூறு வச்சுக்க இந்த பாப்பாக்களுக்கு ஆளுக்கு நூறு கொடுத்துரு...." என்றது!

"காலையில் இருந்து காஞ்சு கெடந்ததுக்கு போதுமா மாமா...?" என்றது சுதா...!

"ரொம்ப அதிகம் இதுவே...., டேங்ஸ்டா சுதா தங்கம், இனி எப்ப வேணாலும் கூட்டிட்டு வா இந்தா என்று நூறு ரூபாயைத் கைகளில் திணித்தான்!"

"வேணாம் மாமா! பெரிசே குடுக்கும்....!"

"சரி...! குட்டிகளா நான் கௌம்பறேன்....." என்ற பெரிசு மூவருக்கும் பிளைன் கிஸ் கொடுத்தது...!

"பெரிசு வயசு பையன் மாதிரி சேட்டயெல்லாம் பண்றீங்க.....உங்க பேரைச் சொல்லுங்க....இனி பேரைச் சொல்லிக் கூப்பிடுறோம் இனி இவரை பெரியவர்ன்னு யாரும் கூப்பிடக்கூடாது" என்றாள் மாலதி நக்கலாக"

"ஹ....ஹ.ஹ..ஹா மை நேம் இஸ் காந்திராஜா!" என்றது பெரிசு!

2 comments:

சீனு 9:57:00 PM  

பெரிசின் பெயர் குறியீடா! வீடு அண்ணாச்சி :-))))))))

Unknown 9:06:00 AM  

இருக்கலாம் சீனு...:)))))

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP