அன்னக்கொடி கொட்டாவி வந்ததடி......!

>> Friday, June 28, 2013


ஆடுமேய்க்கும் கூட்டத்தில் கொடிவீரன் என்ற தலித் இளைஞனும் அன்னக்கொடி என்கின்ற மேட்டுக்குடி இளைஞிக்கும் ஏற்படுகின்ற ஒரு மென்மையான காதலை அழகான ஒளி அமைப்புடன்; கொஞ்சம் மொன்னையாக எடுத்திருக்கின்றார் பாரதிராஜா!

சில இடங்களில் கலைஞர் டிவி சீரியலை ஞாபகப்படுத்தி கொட்டாவி மேல் கொட்டாவி வந்து தாடை வலிக்கின்றது. காதல் காட்சிகளில் கூட தம்மடிக்கப் போகின்றார்கள். பாடல்கள் ஒண்ணு கூட மனசில... ஒட்டவில்லை.....!

மனோஜின் நடிப்பு மிகையாக இருந்தாலும் படத்தை தாங்கி நிற்பதில் உதவுகின்றது. இருபது வயது கார்த்திகா நடிப்பிலும் முதிர்ச்சி உடலிலும்...! இறுதிக் காட்சியில் பாயை விரித்து படுத்து பாவாடையை முழங்காலுக்கு மேல் தூக்கி "புருசன்தானே நீ...? வாடா...!" என்கின்ற இடத்தில் அதிர வைக்கின்றார்....! 

பெண் கேட்டுச் செல்லும் கொடிவீரனையும் அவனுடைய தந்தையையும் கார்த்திகாவின் அம்மாவும், ஊர் மக்களும் வன்கொடுமை செய்யும் காட்சி நம்மை நிமிர வைக்கின்றது ஆனால் அதன் பின் வழக்கமான தமிழ்ப் படமாக சைக்கோதனமான காட்சிகளும்....நாடக தன்மையும் நம்மை எரிச்சலுற வைக்கின்றது. இந்த காட்சியில் துளி கூட லாஜிக் இல்லாதது ஒரு பெரிய குறை கதை நடப்பது அறுபது...எழுபதுகளில். கிராமத்தில் இவர்கள் இன்ன சாதி என்பது பத்து ஊர் தாண்டினாலும் அனைவருக்கும் தெளிவாகத் தெரியும் பிறகு எப்படி பெண் கேட்டு போகின்றார்கள்..?

அன்னக்கொடியை காதலிக்கும் கொடிவீரன் ஒரு தலித் (செருப்பு தைப்பவர்). அவர் தொடர்பான கொடுமைப் படுத்தப்படும் காட்சிகளில் எல்லாம் செருப்பை குளோசப்பில் காட்டுவது என்ன யுத்தி என்றே தெரியவில்லை தமிழ் ரசிகர்கள் இன்னும் முட்டாள்கள் இல்லை ஜீனியஸ்.


உடல் துணிகள் உருவப்பட்டு அரை நிர்வாணமாக ஓடித் தப்பிக்கும் கார்த்திகா, கொடிவீரனின் கூழ் நனைந்த விரல்களை சப்புவது, மீனாளின் ரவிக்கையில்லாத நிர்வாணம் என கிளுகிளுப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இருந்து என்ன பண்றது...?

நல்ல கதைக்களம், அழகான காதல் காட்சிகளுக்கான வாய்ப்பு நிறைய சம்பவங்களை புகுத்தக் கூடிய வாய்ப்பு என அனைத்தும் இருந்தும் ஏனோ வரட்சியான ஒரு திரைப்படத்தையே பாரதிராஜாவால் நமக்கு தரமுடிந்திருப்பது பெருஞ்சோகம். டிரைலரில் பாரதிராஜா நடித்துக் காட்டிய காட்சிகளைப் பார்த்த பாதிப்பா எனத் தெரியவில்லை மனோஜ், கார்த்திகா தவிர அனைவரும் பாரதிராஜா நடித்துக் காட்டியபடியே நடித்திருப்பதாக தோன்றுகின்றது அவர்களிடம் பாரதிராஜாவின் சாயல் தெரிகின்றது அதுவே நம்மை நெளிய வைக்கின்றது....படத்தின் டைட்டில் ஹீரோவிடம் கூட உணர்ச்சியேயில்லை....!

பாசத்துக்குறிய பாரதிராஜா எங்களை விட்டுடுங்க மீமீமீ..........பாவம்...!


4 comments:

Anonymous,  1:29:00 PM  

பாவம் பாரதி ராஜா

கோவை நேரம் 9:48:00 PM  

ஹிஹிஹி...நானும் விமர்சனம் போட்டு இருக்கேன்..ஒரே வரியில்..உங்கள மாதிரி எழுதல மாம்ஸ்.

கோகுல் 6:43:00 AM  

யூ மீன்லீவ் அஸ்.,

எஸ்,எஸ்.
சேம் ப்ளட்.,

Unknown 5:54:00 AM  

அன்னக்கொடி அறுந்த கொடி

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP