இதப்படிங்க முதல்ல

>> Monday, October 31, 2011


முரன்பாடு


பெண்ணின் பெருமைகளை
எடுத்துக்கூறிய சிறந்ததிரைப்படம்
விருதை பெற இயக்குனர்
இரண்டாம் மனைவியுடன்
வந்திருந்தார்...


ஒழுக்கம்


உன் வாழ்க்கை! 
ஒரு கண்ணாடி
முகம் பார்க்கும்
அனைவரும் புன்னகைக்க
வேண்டும்...
கை கொட்டி
சிரிக்கக்கூடாது!


அன்னை


நீ...
கீழே விழும்போது
உனக்கு வலியிருக்கின்றதோ
இல்லையோ...
உன் அன்னைக்கு
வலிக்கும்


உலகஅழகி


புற அழகின்
பெருமையை விட
அக அழகின்
பெருமை
சிறந்தது
அன்னை தெரசா...


சிந்திப்பாய்...


மின்சாரம் நின்றவுடன்
திட்டுகின்றாயே...
மின்சார ஊழியருக்கும்
குடும்பம் உண்டு
அறிவாயா..?


அருமை


நிழலின் அருமை
வெயிலில் வாடுபவனுக்கு
தெரியும்...
மழையின் அருமை
உழவனுக்கு
தெரியும்...
ஒருவரை இழந்தபின்தான்
அவரின் அருமை
தெரியும்...

Read more...

வேலாயுதம் தீபாவளி பேன்சிவெடி

>> Saturday, October 29, 2011



சும்மாவே நா.. காட்டுகாட்டுன்னுகாட்டுவேன்...காட்டு...காட்டுன்னா...

படத்தில் வரும் பஞ்ச் டயலாக் விஜய்க்கு பொருந்துகின்றதோ இல்லையோ? அவருடைய ரசிகர்களுக்குப் பொருந்தும், ஏழாம்அறிவு, வேலாயுதம் என இரண்டு படமும் வெளியிட்ட "மல்ட்டிகாம்ளக்ஸ்" தியேட்டரில் இந்தப்படம் பார்த்தேன், வேலாயுதத்திற்க்கு நின்ற கூட்டம் ஏழாம்அறிவைவிட "பத்து மடங்கு" அதிகம் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் தீபாவளிக்கு ஏனோ? இரண்டு படம் மட்டுமே வெளியிட்டிருக்கின்ற பட்சத்தில் இரண்டின் வெற்றியை தடுக்கமுடியாது 

இயக்குனர் "ராஜா"வைப்பற்றி சொல்லவேண்டியது என்றால் திறமைசாலி என்பதைவிட! புத்திசாலி... எடிட்டர் மோகனின் வாரிசான வர் சினிமாவுக்கு வந்தமுறை எப்படியென்றால்? "எடிட்டர்மோகன்" தெலுங்கில் தயாரித்த படம் ஒன்று படுதோல்வியை சந்தித்து, இருக்கும் சொத்தயெல்லாம் விற்று கடனை அடைத்தார் மிகவும் சிரமமான நிலையில் அப்பாவின் சிரமத்தை தீர்க்க இயக்குனராவது என முடிவெடுத்து குடும்ப நண்பர் "சங்கிலிமுருகனிடம்" ஆலோசனை கேட்க்கும் பொருட்டு ஒரு திரைக்கதையை கொடுத்தார்,

அதை தூக்கியெரிந்த சங்கிலிமுருகன் ஒரு தெலுங்கு பட டிவிடியை கொடுத்து இதை தமிழ்ல எடுக்கலாம் நல்லா படத்தைப்பார்த்து திரைக்கதை ரெடி பண்ணு நானே தயாரிக்கிறேன் என்று சொல்லவும் குடும்பமே உக்கார்ந்து ஒரு மாதத்தில் சிறந்த திரைக்கதையை தயாரித்து.

தயாரித்து வெளியிட்ட ஜெயம் மாபெரும் வெற்றி பெறவில்லையென்றாலும் பொருளை ஈட்டித்தந்தது குடும்ப சிரமத்தை சீரமைத்தது அப்படி சிரமப்பட்டு திரையுலகில் காலடியெடுத்து வைத்தவர்  தம்பி ரவியை ஹீரோ இல்லாமல் விஜயைவைத்து தெலுங்குபடமான ஆசாத்தை தமிழுக்காக மெருகேற்றியிருக்கிறார் முக்கியமான காமடி என்னவென்றால் ஆசாத் நம்ம "திருப்பாச்சி" பேட்டனில் உருவானதுதான்.

படத்தின் கதை "தங்கையின்" திருமணத்திக்காக நகை வாங்க சென்னை வரும் ஹீரோ ஜெனிலியாவின் கற்பனை பாத்திரமான வேலாயுதமாக
தன்னையறியாமல் உருவாகிறார் சென்னையில் குண்டு வைக்க வரும் தீவிரவாதிகளை மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் ஹோம் மினிஸ்டர் ஆகியோரது சதிகளை முறியடிக்கிறார் இடையில் ஹன்சிகா.ஜெனிலியாவுடன் டூயட் பாடுகிறார் இவ்வளவுதான்

படத்தின் சிறப்பு வசனம், இடைவேளை வரை கலகலப்பாக செல்கின்றது உதாரணத்திற்க்கு சில...

கோழியை துரத்திச்செல்லும் விஜய் கல்லக்காதலனனுடன் உல்லாசமாக இருக்கும் பெண்ணின் வீட்டுக்குள் நுளைந்து விடுகிறார்..

அக்கா..யாரு அது..

விருந்தாளி

ஓ...விருந்தோம்பலா...நடக்கட்டும் நடக்கட்டும் ..

வெளியே வரும் விஜய் பெண்ணின் கணவனை பார்க்கிறார்

எண்ணண்னே...எங்க போய்ட்டு வர்ரீங்க

விளக்கு ரிப்பேர் பண்ணபோனேன் கையில் உள்ள விளக்கை தூக்கி காண்பிக்கிறார்

அப்ப சீக்கிரம் போய் புடிங்கன்னே...

தியேட்டரே அதிர்ந்து விட்டது

பிறகு சந்தானம் திருடதெரியாத திருடன் செம காமடி பண்ணுகிறார்

மானமுள்ளவனா இருந்தா 
நடுஹால்ல தூக்கு மாட்டி சாகனும்யா நீ...

உம் பொண்ணு சிக்ஸர் அடிக்கவா போறா வேல... கரைட் பண்ணபோறா நீ யெல்லாம் அப்பனா

இல்லை மாமன்

என்னது...

யோவ் வேலாயுதத்துக்கு மாமன்

படத்தை தூக்கி நிருத்துவது சந்தானம் காமடியும் வசனம் மட்டுமே

ஹன்சிகா தொப்புளை காட்டி கவர்ச்சி காட்டுவதும் விஜய்யை ஜொள்ளிட்டு சுற்றுவதும் என வழக்கமான வேலையை செய்திருக்கிறார் சொல்லும்படி ஒன்றும் இல்லை

ஜெனிலியாவை தேவையில்லாமல் விஜய்யை காதலிக்க வைத்து ஒரு டூயட்டுக்காக ஒப்பேற்றியிருக்கிறார்கள் விஜய்ய காதலிப்பது போன்று இல்லாமல் இருந்தால் கேரக்டர்க்கு ஒரு வெயிட் இருந்திருக்கும்

சரண்யாமோகன் விஜய்க்கு தங்கையாக வருகிறார் முகவெட்டு இருவருக்கும் பொருந்துவதால் விஜயின் தங்கையாக மிக கச்சிதமாக பொருந்துகிறார் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் நிறைய படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் பார்த்ததால் ஈர்ப்பு இல்லை



ரயில் கெமிக்கல் பேக்டரியில் உள்ள டேங்க் மீது மோதும் காட்சியில் கிராபிக்ஸ் கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள், ஆனால் லாஜிக் ஓட்டையால் வீணாகிவிட்டது எந்த கெமிக்கல் பேக்டரியில் தண்டவாளத்தின் நடுவில் கொண்டுபோய் அபாயகரமான கெமிக்கல் உள்ள டேங்க்கை வைப்பார்கள் கொஞ்சமாவது சிந்திங்கப்பா...


சரி குறை சொல்லிக்கொண்டு போனால் நிறைய சொல்லலாம்... இந்த மாதிரி லாஜிக் ஓட்டையுள்ள எத்தனையோ படங்கள் நன்றாக ஓடியுள்ளது... இதுவும் ஓடும்... 

பாடல்கள் கேட்கின்றபோதுள்ள இனிமை திரையில் இல்லை சுமார்தான்

வேலாயுதம் ஒரு பொழுதுபோக்குக்காக பார்க்கலாம் போரடிக்காது, பார்க்கலாம் தவறில்லை ஆனால் நண்பர் நிருபன் அவர்கள் கூறியது உண்மைதான் வன்முறை சண்டைக்காட்சிகளில் ஏன் இவ்வளவு கொடூரம் விஜய் படத்தினை குழந்தைகள், பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என விஜய் அறிந்துகொள்ளவேண்டும்..!





Read more...

மழைக்காதலி(கவிதை)

>> Friday, October 28, 2011






ஒரு மழைக்காலத்தின்
பின் பொழுதில்
பேருந்துகள் ஏதும் ஓடாத
ஒரு நாளில் வழியின்றி
நின்றுருந்த அவளை
என் வாகனத்தில் ஏற்றி
அவளில்லம் சேர்த்தேன்
அன்றிலிருந்து...
எதிர்ப்படும்போது
ஒரு புன்னகை!
கொஞ்சம் வெட்டிப்பேச்சு!
செல்பேசி எண்ணின்
பன்டமுறைமாற்றலில்
நிறையப்பேச்சு...
என நட்பு வளர்ந்தது...

பின்னொரு
மழைக்காலத்தில் நட்பு
காதலானது
கரங்கள் கோர்த்து
கடல்கரை மணலில்
கால் பதித்து நடந்து
கதை பேசினோம்
காரணங்கள் இல்லாமல்
சிரித்து மகிழ்ந்தோம்...

அதேபோல்
ஒருமழைகாலத்தில்
முறிந்து போய் சாலையில்
கிடக்கும் மரம்போல்
எங்கள் காதலும்
முறிந்து போனது
தொழில்நுட்பம் அறிந்த
எனக்கு பணநுட்பம்
அறியாததால்
பகுத்தறிவு அறிந்த
எனக்கு பெண்ணறிவு
குறைவுதான்
வேறொறுவனுக்கு
நிச்சயம் செய்யப்பட்டாள்
நான் எச்சில் இலையாக்கப்பட்டேன்
காதலின் சோகம்
மனதையழுத்த
சாலையின் ஓரம்
நடந்து வந்துகொண்டிருந்தேன்
மழை ஆரம்பித்தது
வெய்யிலின் சூடு
பொறுத்தவர்கள்
மழையின் குளுமை
பொறுப்பதில்லை ஏனோ...?
ஓட்டுக்குள் பதுங்கிய
நத்தையாய் பதுங்குகின்ற
மனிதர்கள்...
ஒருவரும் சாலையில் இல்லை
நான் மழைக்காதலன்தான்
ஆனாலும்
காதலியின் பிரிவின் துயரத்தால்
மழையின் சுகம் தெரியவில்லை..!

என்னை நொந்து
நடந்து சென்ற என்னை
தடுத்து நிறுத்தியது
ஒரு பெண் குரல்
அழகான
ஒரு தேவதை
இருட்டாயிருந்த
தெருவை காண்பித்து
என்னை என் வீடு வரை
கொண்டு விட முடியுமா
பயமாயிருக்கு
என்று கெஞ்சியது

வீடுவரை
விட்டு வந்தேன்
அவள் பெயர்,
வேலை, ஊர்
எல்லாம் கேட்டேன்
திரும்பி வந்த
என்னுள்...
ஏனோ..! அவள் முகம்
நிலலாடிக் கொண்டேயிருக்கின்றது...
இன்னோறு மழைக்காதலி
கிடைத்துவிட்டாளா...!

Read more...

யாராவது வருவார்களா?

>> Tuesday, October 25, 2011






யாராவது வருவார்களா?

அம்மா ஊட்டி விட்ட
இனிப்பை அவள்
மடியில் அமர்ந்து
சுவைக்க முடியவில்லை...


எங்கள் கை பிடித்து
பெரிய வெடி வெடிக்க
கற்றுக்கொடுக்க
அப்பா இல்லை...


புத்தாடையின் அழகை
காட்டி ரசிக்க
தாத்தா பாட்டி
யாருமில்லை...


ஏனெனில்


பட்டாசு இனிப்பு புத்தாடை தர
வருவார்கள் என.......
யாராவது வருவார்களா என
வாசலையே பார்த்துக்கொண்டிருக்கும்
அன்பு இல்லத்தின்
அநாதை குழந்தைகள் நாங்கள்!

அன்புள்ள நண்பர்களே இந்த கவிதை படிக்கும் போது உங்களுக்கு வலித்திருக்கும்
யாராவது ஏழை குழந்தைகளுக்கு சின்ன உதவியாவது செய்யுங்கள்
பொருள் அதிகம் உள்ளோர் அருகிலுள்ள அநாதை ஆசிரமங்களுக்கு சென்று பரிசு பொருள் தாருங்கள்
இனிப்பு தாருங்கள் மனசு நிம்மதியாக இருக்கும்..
அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

Read more...

ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும்,தோத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றதுக்கு போன நம்ம சினிமா கமெடியன்கள்

>> Saturday, October 22, 2011




வாங்க நண்பர்களே இன்னிக்கு ஞாயித்துகிழமை லீவுநாளு உள்ளாட்சி தேர்தல் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடந்திட்டு இருக்கு ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் தோத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றதுக்கு நம்ம சினிமா கமெடியன்ஸ் எல்லாம் 
போயிருக்காங்க எப்படின்னு மக்களுக்கு தெரியவேண்டாமா.....ஓரு கற்பனை

----------------------------------------------------------------------------------------------------------------

நம்ம கவுண்டமனி அண்ணன் அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல போறார் அங்க செந்தில் வரார்

அண்ணே......அண்ணே...... அண்ணே...... எங்க கட்சி ஜெயிருச்சுனே எதாவது வாழ்த்து சொல்லுங்கண்ணே....


டேய்...அரைடவுசர் தள்ளி உக்காரு பெட்ரோமாக்ஸ் பக்கத்துல உக்காராதே...


டேய்...... அரசியல்ல ஜெயிக்கறது பெட்ரோமாக்ஸ்க்கு உள்ள இருக்குற மேனல் மாதிரி அது உயிரோட இருக்கர வரைக்கும்தான் மவுசு... அதுக்கு எதாவது நல்லது பண்ணிட்டே இருக்கனும் அதாவது மண்ணெண்ணை ஊத்திக்கிட்டே இருக்கனும் இல்லைன்னா அட கென்னியா மக்கா கொடநாட்டுல கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....தான்


---------------------------------------------------------------------------------------

வடிவேலு கலைஞர்க்கு ஆறுதல் சொல்லப் போகிறார்

அய்யா....அய்யா....அய்யா....அய்யா....இப்படி பண்ணிபுட்டாங்களே அய்யா....ம்ம்ம்ம அதெல்லாம் சரி அய்யா நாங்க ஆட்சியில இருந்த போது உள்ளாட்சி தேர்ந்தல்ல ஜெயிச்சோம் இப்ப அதிமுக ஜெயிச்சிருச்சுன்னு சொல்றீங்க அய்யா...எந்த அர்த்தத்துல சொல்றீங்க அய்யா

நாம எட்டாவது பாஸ்..! ஆனா? பத்தாவுதல பெயில்ய்யா.....!


இது கூட தெரியாம சின்னபுள்ளையாவே இருக்கீங்க...வ்வூவூவூவூவூவூவூவூவூ........................


---------------------------------------------------------------------------------------

ஜனகராஜ் விஜயகாந்த்துக்கு ஆறுதல் சொல்லபோகிறார் புல்மப்புல.....

அண்ணே நான் தாயம்மா....அடச்சீ ஜனகராஜ் வந்திருக்கன்னே......


நீங்க பேசர்ரது உங்களுக்கே புரியலங்க.............மக்களுக்கு எப்புடி புரியுங்க.......(விஜயகாந்த் டெரர் ஆகுகிறார்)


அய்யோ உங்கள கவுத்துட்டானுவ.....இப்ப எதிர் கச்சி தலிவரு இல்லன்டானுவ என்னங்க பண்ண போரீங்க......


தொப் என்று கீழே விழுந்துவிடுகிறார்


மப்பு தெளிஞ்சா தானா வீட்டுக்கு போயிடுவார் என்று விஜயகாந்த் போக


ஜனகராஜ் எழுந்து கவுண்ட தண்ணியடிச்சதாவே நம்பிட்டா என்று 
எஸ்கேப்


---------------------------------------------------------------------------------------

காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு ஆறுதல் சொல்ல வெண்ணிறஆடைமூர்த்தி போகிறார்

ப்ப்பப்பரக்கேன்னு........படுத்து கிடந்த காங்கரச தூக்கி நிறுத்தபேறீங்கன்னு வந்திங்க சட்டமன்றத்துல சாச்சுபுட்டிங்க 


தொளதொளன்னு இருக்கர கட்சிய பளபளன்னு ஆக்கபோறிங்கன்னு வந்திங்க ப்ப்ர்ர்ர்ர்ர்ர்.....கிழிச்சுட்டிங்க


அடுத்தது என்ன செய்ய போறீங்க....


தங்கபாலு விட்டார் ஜூட்....


--------------------------------------------------------------------------

விவேக் ஆறுதல் சொல்ல போகிறார் ராமதாஸ் வீட்டுக்கு

அய்யா உங்களுக்கு ஆறுதல் சொல்ல போகப்போறதில்லை ஒரு கவிதை சொல்லப்போறேன்...


ஒரு தமிழ் குடிதாங்கி


மருத்துவசிங்கம்


தேர்தல் பரிச்சையில


சைபர் வாங்கியுருக்கே ஒரு ஆச்சர்யக்குறி.....


கடுப்பான அய்யா சவுக்கை எடுத்துவர விடு ஓட்டம்
--------------------------------------------------------------------------
என்ன மக்களே சிரிச்சிங்களா? கடுப்பானிங்களா?எதானாலும் கருத்த போடுங்க 


தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா?
படிச்சிருப்பிங்க...படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க 


படம் ரிலீஸ் ஆயிருச்சு.... அடிக்க வராதிங்க.. சொல்றதக்கேளுங்க.. திருச்சூர் "பிந்து" தியேட்டர் ங்கெய்யால கில்மா படமா போடக்கூடிய தியேட்டர் (வருசத்துல 365 நாளும் சகிலா படமா ஓடும்) அந்த தியேட்டர்ல ரிலீஸ், 1000 கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், என செமக்கூட்டம், இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது திருச்சூர், படம் பார்க்கபோன மக்கள் செம ரகளை செய்ததால் தியேட்டரே நாஸ்தியானது 
அட... எங்க போறிங்க? இருங்க தமிழ் கூறும் நல்லுலகுக்கு சீக்கிரம் வரப்போகுது அப்புறம் பார்த்துக்கலாம்...!

தியேட்டர்ல நடந்த ரகளை கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் 





Read more...

அம்மாயி(கவிதை)

>> Friday, October 21, 2011

இது ஒரு மீள் பதிவு காரணம் நாற்று நிருபன் அவர்களின் 

குடு குடு பாட்டிகளின் கல கல நினைவுகள்!


என் அம்மாயியை நினைவு படுத்தி விட்டது ..!


Read more...

நவராத்திரி கொலுபொம்மை...


Read more...

தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா...

>> Wednesday, October 19, 2011


என்னடா இந்த பன்னாடை jiiiigh அப்படின்னு போட்டு ஒரு போஸ்ட்டை போட்டுருக்கறானே இவன் என்ன மென்டலா அப்படின்னு பாக்கறீங்க என்ன பன்றது பிரதர் நாடு போடுற சீ...சீ....உலகம் போறத பார்த்தா இனிமே நாம முக்கியமா பதிவு போடக்கூடாது என்ன சார் பின்ன

சூர்யஜீவா அண்ணாச்சி கமெண்ட் போட்டிருக்கிறார்

"நல்லா தான்யா போடுறீங்க பதிவு...
தம்பி டீ இன்னும் வரல"

அண்ணனுக்கு வணக்கம் நான் நேற்றைக்கு ஒரு நியூஸ் படிச்சேன் மலையாளத்தில நண்பன் படிச்சு சொன்னது அவன் சொன்னான் கொய்யால என்னடா பதிவு போடுறீங்க எங்காளு(மலையாளி) ஒருத்தன் பன்னியிருக்கான் பாரு "யூ-டுயூப்ல" நாக்க புடுங்கிட்டு சாகுங்கடா...! என்றான் எனக்கு வந்ததே கோபம், தமிழ் ரத்தம் கொதித்தது, தமிழ்ல எவ்வளவு "நல்ல" விசயத்தை எழுதறாங்க இப்படி சொல்லிட்டானே என்னடா குறையை கண்டுட்டே "பந்தரன்ரை" என்று கேட்டேன்

நீயும் கவிதை எழுதர விமர்சனம் போடுற கட்டுரை எழுதர உனக்கு கூகுல்ல இருந்து பத்து பைசா வாங்கியிருக்கியா? ங்ஙே என முழித்தேன் இல்லையே.... என்றேன் தமிழுக்கு விளம்பரம் கூட கிடைக்கிறதுல்லை என்றேன் ஈனஸ்வரத்தில்
அப்ப நான் படிச்ச நியூஸ்சைக்கேளு என்றான் அது

சந்தோஸ்பண்டிட் அப்படிங்கர அண்ணன் மகா.....மொக்கையா மொக்கையினா மொக்கை அப்படி ஒரு மொக்கையா ஒரு ஆல்பம் ரெடி பண்ணினாரு அவரே டைரக்சன் அவரே இசை அவரே நடிகர் கதாநாயகி ஒரு அட்டுன்னா...அட்டு...அப்படியொரு..அட்டு..! கொல்லங்குடி கருப்பாயி ரேஞ்சுல நம்ம பங்காளி சுற்றியுள்ள நண்பர்களுக்கு "சிடி" கொடுத்திருக்கிறார் அதோட அவர் பிரண்ட்சிப்பே வேண்டாம் என ஓடி விட்டார்களாம். 

நல்லா விட்டத்தை பார்த்து ரோசனை பண்ணின தலைவர் யூடுயூப்ல போட்டுட்டார் உலகத்தில் உள்ள கெட்டவார்த்தையெல்லாம் போட்டு படிக்கவே கண்,காது,மூக்கு, இன்னபிற சமாச்சரமெல்லாம் கூசரமாதிரி திட்டி கமெண்ட் போட்டிருக்காங்க என்னடா இப்படி திட்டுறாங்கன்னு சேட்டன் தூக்கிட்டாரு..! விட்டாங்களா நம்ம ஆளுங்க டவுன்லோடு பண்ணி மறுபடியும் யாரோ? போட்டுட்டாங்க...! 

என்னடா... இந்த ஆள இப்படி திட்டுறாங்கன்னு (ஒன்று இரண்டு இல்லை மொத்தம் 82000 கமெண்ட்ஸ்)பார்த்தவங்க 25லட்சத்திற்கு மேல் கூகுல் அண்ணாச்சிக கூப்பிட்டு பாராட்டி அண்ணனுக்கு லம்பா ஒரு அமெவுண்ட் கொடுத்துட்டாங்க வாங்கிய சந்தோஸ் என்ன செய்ய போறாரு தெரியுமா? (யோவ் கூகுல் கமெண்ட் ஹிட்சை பார்த்து ஏமாந்துட்டியே பக்கி எல்லாம் வெளிநாட்டு பக்கிகளா இருக்கு என்ன பன்றது)

படம் எடுக்கபோறாரு படத்து பேரு "கிருஷ்ணன்ராதை"டைரக்சன்,கதை,வசனம்,இசை,சண்டை,பாடல்,கலை,எடிட்டிங், பிண்ணனியிசை,எபக்ட்,உடைகள்,டைட்டில் கிராபிக்ஸ்,தயாரிப்பு, ஸ்.....அப்பா எல்லா சேட்டன்தான் கேமரா மட்டும் வேற

இன்னோரு முக்கிய செய்தி படத்தை மூனு மொழியில தயாரிக்கிறார் அதை லிம்கால பதிவுபண்ண போறாங்களாமா...அதுல நம்ம தமிழும் ஜெண்டில்மேன்(சிபி மாட்டுனீங்க ஐ..ஐ...ஐ)



கண்டிப்பாக பெண்கள் இந்த லிங்க கிளிக் பண்ணாதீங்க அப்படியே பார்க்க ஆசைப்பட்டாலும் கமெண்ட்டை படிக்காதிங்க








என்ன சூர்யஜீவா அண்ணாச்சி டீ வந்திருச்சா....

Read more...

அம்மா (கவிதை)

>> Sunday, October 16, 2011



Read more...

முரன் திரைப்படம் எப்படியிருக்கின்றது?

>> Tuesday, October 11, 2011




"யு"டிவி யின் தயாரிப்பில் ராஜன்மாதவ் என்பவர் இயக்கியுள்ளார், இது ஒரு "ஆங்கிலப்படத்தின் "தழுவல்" என்பது இணையத்தில் உலவும் செய்தி அதைப்பற்றி எந்த அறிவிப்பும் திரைப்படத்தில் இல்லை! 
நிறைய இயக்குனர்கள் இந்த தவறைச்செய்கின்றார்கள் இயக்குனர் "மகேந்திரனை" விட மனித உணர்வுகளை வெளிப்படுத்தியவர்கள் யாரேனும் உண்டா?அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதில் எள்ளவும் சந்தேகமுண்டா? இல்லை ஆனால் அவர் பெரும்பாலான திரைப்படங்கள் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்கதைகளை இயக்கியிருப்பார் அதற்க்கான அறிவிப்பை வெளியிடுவார் அது அவருடைய நேர்மைக்கு ஒரு சான்று, அதனால் அவர் ஒன்றும் குறைந்துவிடவில்லை, பிறகு ஏன்? எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது, சிறு கருவானாலும் அறிவிப்பது ஒரு படைப்பாளிக்கு அழகு, ஆனால் பத்திரிக்கை மற்றும் இனையதள நண்பர்களுக்கும் நன்றி என்று டைட்டிலில் போடுகிறார்கள் வரவேற்க்ககூடியது.

இந்த படத்தின் கதையை கூறிவிட்டால் படம் பார்ப்பது சுவையில்லாமல் செய்துவிடும், அதனால் படம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றிமட்டும் அலசுவோம், இரண்டு முரன்பாடான குணமுடைய இருவர் பிரசன்னா மற்றும் சேரன், சேரன் மற்றும் நிகிதா, பிரசன்னா மற்றும் ஜெய்பிரகாஷ் இவர்கள் தான் கதைக்கான அடித்தளம்.

கருத்துக்கள் ஒத்தவர்களோடு நட்பு கொள்வதும் காதல் கொள்வதும்தான் இனிமை தரக்கூடியது இல்லையென்றால் நரகம்தான் அப்படியொரு நரகத்தில் வாழ்பவர்தான் சேரன் அவரின் மனைவியான நிகிதா சேரனை பிடிக்காமல் வேண்டாவெறுப்பாக வாழ்பவர் இசையை மருந்தளவு கூட ரசிக்காத மனைவி கிதார் இசைக்கலைஞர் சேரன் அவருடைய வாழ்வில் ஒரு மயிலிறகைப்போல் மனதை வருடும் தோழி ஹரிப்பிரியா அவர்களின் காட்சியமைப்பை இயக்குனர் மழைச்சாரலில் நனைந்து கொண்டே செல்லும் கார் பயணத்தைப்போல் அழகாக செதுக்கியுள்ளார்

பணக்கார இளைஞனாக வரும் பிரசன்னா தமிழ் சினிமாவின் காட்டுகத்தல் கண்கள் சிவக்க வசனம் பேசும் வில்லன்களுக்கு மத்தியில் ஒரு சாக்லெட் வில்லன் பிருதிவிராஜ் கனாக்கண்டேனில் இது போன்று செய்திருந்தார் இயக்குனர் முறையாக பயன்படுத்தியுள்ளார் பிரசன்னா வில்லன் என்றால் சேரன் ஹீரோ என கற்பித்துக்கொள்ளமுடியாது உண்மையில் படத்தின் ஹீரோ திரைக்கதைதான் இடைவேளை வரை ரிலாக்சாக செல்லும் கதை பிறகு சேரன் கொலை செய்வாரா?மாட்டாரா 
என்னும் எதிர்பார்ப்பை இயக்குனர் ஆடியன்ஸ்க்கு கொடுப்பதில் வல்லவராக இருக்கிறார்

சேரன் பாடிலாங்வேஜ் இந்த பாத்திரத்திற்க்கு ஒத்துப்போகின்றது உதட்டை பிதுக்கிவைத்துக் கொண்டு ஒருமாதிரி நடிப்பவர் சேரன் மாயக்கண்ணாடி பார்த்திருந்தால் தெரியும் இதில் அந்த கொடுமையெல்லாம் இல்லை நடித்திருக்கிறார் சேரனின் பாத்திரத்தை பரிதாபப்படவைப்பதில் நிகிதா பாத்திரம் துணைநிற்கின்றது

நான் தாலிகட்டுன புருசன் தொடக்கூடாதா...

தாலிமட்டும் கட்டிட்டா போதும்மா...

நைட் நீ என்ன நிலைமையில வந்த தெரியுமா? அப்பவே கேட்டுருப்ப கேட்கர நிலமையில நீயில்லை

இங்க பாரு என்னை நீ கேள்வி கேட்க கூடாது என்னோட வருமானத்துல பத்து சதவீதம்தான் உன் வருமானம்

இதை போன்ற வசனங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது பரிதாபப்படவைக்கின்றது, நிறைய திருப்பங்களை கொண்ட திரைக்கதையை மிக நேர்த்தியாக எங்கேயும் சலிப்படைய வைக்காமலும் கொண்டு சென்றதில் இயக்குனர் சபாஷ் பெறுகின்றார், திரில் கதையில் ஓவர் கவர்ச்சியிருக்கும், குடும்பத்தோடு பார்க்க முடியாது இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கும் அளவு டீஸன்டாக எடுத்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும் நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது..!



Read more...

என்னை கண்காணிப்பவன்....(‘சவால் சிறுகதை-2011’)

>> Thursday, October 6, 2011


அன்பின் உடன்பிறாவாத... என் சகோதர....சகோதரிகளே...தாய் தந்தையரே அனைவருக்கும் வணக்கம் நானும் கிறுக்க சுவர்(blog) கிடைத்த காரணத்தினால் என் கிறுக்கல்களுக்கும் ஒரு சில திட்டும் குட்டும் நிறைய பாராட்டும்(தெரியாம பாராட்டிட்டோம்ன்னு சொல்றது காதுல விழுது)கொடுத்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி...

இந்த சிறுகதையை எழுதியுள்ளேன் என்னை மேலும் உங்கள் கைகளால் குட்டியும் திட்டியும் பாராட்டியும் மறக்காம ஓட்டும் போட்டு என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்...




என்னை கண்காணிப்பவன்....(‘சவால் சிறுகதை-2011’)

மாலை நேர கடமையை முடித்துக்கொண்டு "கதிரவன்" மெல்ல தன் வீட்டுக்கு சென்றிருந்தது ஜான் தன்னுடைய யமாஹா100ஐ வேகமாக விரட்டினான் ஜான் மாஜிஅமைச்சர் ராஜநாயகத்தின் வலதுகரம், இடதுகரம் எல்லாம் அவன்தான் தீவிரவிசுவாசி. ஆறுஅடி உயரம், கருப்புநிறம், தீவிர உடல்பயிற்சி காரணமாக காட்டெருமை மாதிரி மாதிரியிருந்தான், இடுப்பில் எப்போதும் குடியிருக்கும் "ஜெர்மன்" மேக் பிஸ்டல் இக்கம் என்பதை அறியாதது....

நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் இரவு நேரங்களில் அமைச்சர் தாகசாந்தி செய்வார், பெரும்பாலும் அங்கே யாரும் போகமாட்டார்கள், ஜான் மற்றும் நம்பிக்கையான ஒரு சிலர் மட்டும் செல்வார்கள், அமைச்சர் போன்...! செய்து உடனே தோட்டம் வா! என்றவுடன் உடனே புறப்பட்டு செல்கின்றான் ஜான் சில மணிகளை தின்று பண்ணை வீட்டை அடைந்தான் ஜான்.

நடு தோட்டத்தில் அமைந்திருந்த பங்களாவின் போர்டிகோவில் வெள்ளை நிற மஹிந்திராவின் "வெரிடோ" பெமரோனியன் மாதிரி நின்றிருந்தது அதன் பக்கத்தில் யமஹாவை நிறுத்தி விட்டு சுற்றும் ஒரு முறை பார்த்தான் ஜான், ஒரு பெரிய கூண்டுகளில் அல்ஷேசன், புல்டாக் வகையறா நாய்கள் உருமிக்கொண்டுருந்தது, பைக் சாவியை சுழற்றிக்கொண்டே பங்களாவிற்க்குள் நுளைந்தான் ஜான். 

எதிரே ஜானைக்கண்ட பண்ணையை பார்க்கும் "ராசன்" ஜான்அண்ணே... அண்ணன் உங்களுக்காக மாடியில காத்துட்டு இருக்கிறார் போங்க என்றான், ஹாலில் இருந்து மாடிக்கு பிரவுன் கலர் மார்பிள் பதிக்கப்பட்ட சுழன்று...சுழன்று... செல்லும் படிக்கெட்டில் ஏறி மாடியை அடைந்தான் ஜான்.

மாடியில் தென்னைமரத்தின் குளிச்சியான காற்று உடலை இதமாக வருடியது, நடுநயமாக போடப்பட்ட வெல்வெட் சோபாவில் காதல் தண்டபாணி சாயலில் கோல்டு பிரேம் பவர் கண்ணாடியில் பனியன்,லுங்கியில் சாய்ந்து உக்கார்ந்திருந்தார் இராஜநாயகம், எதிரே இருந்த மேஜையில் ஃபாரின் பிராந்தி புல் பாட்டிலில் பாதி காலியாக இருந்தது வறுத்து வைத்திருந்த சிக்கன் மசாலாவில் குளித்துக்கொண்டுருந்தது கண்ணாடி டம்ளரில் மீண்டும் சரக்கை ஊற்றிய அமைச்சர் ஜஸ் க்யூப் போட்டு வைத்திருந்த பிளாஸ்க்கில் இருந்து இடுக்கியில் எடுத்து உள்ளே போட்டார் ஜஸ் கரைந்த பின் உள்ளே தள்ளி ஒரு சிக்கன் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றார்...

உண்டபின் சிறிது ஜஸ் வாட்டரை குடித்துவிட்டு தொண்டையை செருமிக்கொண்டு வாடா உக்காரு... என்றார்,
ஜான் அவருக்கு எதிரில் பவ்யமாக தரையில் உக்கார்ந்தான், "தலைவரே என்ன விசயம் அவசரமா வரச்சொன்னீங்க..."
"முக்கியமான விசயம்தான் ஜான்... நம்ம ஆட்சி மாறினதால, இப்ப நம்ம கட்சி ஆளுகளை நோண்ட சொல்லி லஞ்ச ஒழிப்பு துறையை இந்த அரசு பிரசர் குடுக்குது, நம்பிக்கையான ஒரு ஆளு தகவல் குடுத்திருக்கிறான், இன்னும் ஓரிரு வாரத்தில ரெய்டு நடக்கலாம்...!



என்ன தலைவரே..! நாமதான் தேர்தலுக்கு முன்னேயே...எல்லாம் ரெடி பண்ணிட்டம்ல்ல ஆடிட்டர் கூட எந்த பிரச்சனையில்லைன்னு சொன்னார்...

டேய்..நீ.. முட்டாளா..? கடைசியா ஒரு லேண்டை முடிச்சுக்குடுத்தமே சேட்டுக்கு..' அவன் கொடுத்த கமிஷன் 12கோடிய தேர்ந்தல் முடிஞ்சு பார்த்துக்கலாம்ன்னு விட்டுட்டுடோம், நம்ம கட்சிதான் வரும்ன்னு கருத்துக்கணிப்பை நம்பினது தப்பாப்போச்சு...

அட..ஆமா இப்ப எண்ணன்னா பண்றது?ஆடிட்டர் கிட்ட கேட்டிங்களா...?

இப்ப ஒன்னும் பண்ண முடியாதுன்னு ஆடிட்டர் சொல்லிட்டார், ஏன்னா..' இப்ப என்னை சார்ந்தவங்க கணக்கை தீவிரமா வாட்ச் பண்றாங்க, நானும் மண்டையை போட்டு நசிக்கி பார்த்துட்டேன், நாலு லார்ஜ் உள்ள போனதுதான் மிச்சம்...' என்றபடி ஆகாயத்தைப் பார்த்தார் இராஜநாயகம்.

ஜான் சிறிது நேர யோசனைக்கு பின் "அண்ணா ஒரு யோசனை சரிவருமா பாருங்க" என்று தன் யோசனையை சொன்னான் கால் மணி நேரம் செலவிட்டு சொன்னதை செவிடுமடுத்து கேட்ட இராஜநாயகம் "சரியான யோசனைடா ஜான் அதுக்குத்தான் நீ.. வேனும்கறது சரி நீ என்னை காலைல பாரு என்றார்....' 
"இரவு மெல்ல...மெல்ல... உலகத்தின் மேல் கறுப்பு நிறத்தை அதிகப்படுத்திக்கொண்டது"

....................................................................................................................................................................

அதிகாலை சூரியன் தன் கதிர்களை புவியின் மேல் ஸ்கேன் செய்து பார்த்துக்கொண்டு இருந்தது, சுள்ளென்ற வெயில் முகத்தில் பட்டவுடன் மாடியில் படுத்திருந்த விஷ்ணு எழுந்து கண்களை கசக்கினான், இரவு குடித்த மட்டமான "டாஸ்மாக்" இப்போது வரை நாறியது, மாடியில் இருந்த பைப்பை திருகி முகத்தை கழுவினான், கையில் கட்டியிருந்த வாட்ச்..ஐ பார்த்தான் மணி 8.00AM என காட்டியது.

அவன் கிளம்பும் வரை அவனைப்பற்றி பார்ப்போம் B.sc வரை படித்த விஷ்னு ஒரு சேர் புரோக்கிங் அலுவலகத்தில் பணிபுரிகின்றான் மாதம் 7000 சம்பளம் அது அவன் குடிப்பதுக்கும் சாப்பிடுவதுக்கும் சரியாக இருக்கும் எந்த லட்சியமும் இல்லாத பயணம் அவனுடையது அவனுடைய அம்மாவும் அப்பாவும் ஓரு பேருந்து விபத்தில் இறந்த பிறகு எந்த சொந்தங்களுடன் ஒட்டாமல் தனியே வாழ்கிறான்.

விஷ்ணு குளித்து முடித்து அவசரஅவசரமாய் கீழேயுள்ள மெஸ்சில் நாலு இட்லியை விழுங்கிவிட்டு பேருந்து பிடித்து நகரத்தின் மத்தியில் உள்ள அலுவலகத்துக்கு சென்று தனக்கென ஒதுக்கப்பட்ட கணினியின் முன் அமர்ந்து அதில் மூழ்கினான் 10.00மணி இருக்கும் போது அவனுடைய சோனிஎரிக்சன் ரிங்டோனிட்டது எடுத்துப்பார்த்தான் நம்பர் மட்டும் இருந்தது யாராக இருக்கும் என்கின்ற யோசனையில் எடுத்து பேசினான்

ஹலோ...

யார் விஷ்ணுவா..?

ஆமா நீங்க யாரு?

உனக்கு தெரிஞ்சவர்தான் தம்பி எதிரே இருக்கற  விமலா காஃபி பார்க்கு வா உன்கூட பேசனும் 

போன் கட்டாகிவிட்டது யாராக இருக்கும் என்கின்ற சிந்தனையில் பர்மிஷன் கேட்டுவிட்டு காஃபி பார்க்கு சென்றான்

அங்கே சென்றவுடன் வா...விஷ்ணு என்றவரை பார்த்தவுடன் எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தன் மூளை ஹார்ட்டிஸ்க்கை சர்ச் செய்தான் விஷ்னு

என்னப்பா அடையாளம் தெரியிலையா? என்றார் அந்த நபர்

ஸாரி...ஸார் தெரியலை

ஓகே....ஓகே....ஓகே....நானே சொல்ர.. நான் APSபார்க்கு ஒரு நாள் குடிக்க வந்த ஓவராயி பிளாட் ஆயிட்ட நீதான் என்னை வீட்டுல விட்ட ஞாபகம் இருக்கா...?

ஆமா...ஆமா...ஆமா...சாரிண்ணே மப்புல இருந்ததால தெரியல உங்க...பேர் கூட...ஜான்னு சொன்னிங்க மினிஸ்டர் இராஜநாயகத்துகிட்ட வேலை செய்யறதா சொன்னீங்க

கரைக்ட் தம்பி உண்ணால எனக்கு ஒரு காரியம் ஆகனும் போய் ஒரு நாள் லீவு போட்டுட்டு வா...



என்னப்பா தயங்குற சேர் மார்க்கெட்ல அண்ண... முதலீடு செய்யற ஐடியாவுல இருக்கார் அதபத்தி கேட்டாரு எனக்கு தெரியல



அப்ப உன் ஞாபகம் வந்தது அன்னிக்கு என்னமோ உங்களுக்காக உயிரையே தருவன்னு சொன்னே மப்புல சொன்னியா சரி விருப்பம் இல்லைன்னா விட்டிரு நான் வேற ஆள் பாத்துக்கறேன்

அண்ணே தப்பா நினைச்சுக்காதிங்க இதோ இப்பவே ஆபிஸ்ல சொல்லிட்டு வருகிறேன் என்றான் விஷ்ணு.


அமைச்சர் இராஜநாயகம் முன் இருவரும் நின்று கொண்டுருந்தனர்

இராஜநாயகம் பேசினார் தம்பி விஷ்ணு சேர் மார்க்கெட் சந்தேகம் எல்லாம் கிடையாது நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்... சும்மா வேண்டாம் உனக்கு இரண்டு லட்சம் தருகிறேன்.. அரசு வேலை வாங்கித்தருகிறேன்.. நீ...செய்யவேண்டியது சிம்பிளான வேலைதான்..!
ஏதாவது ஒரு பேங்கில உன் பேர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்க செக் புக் பாஸ் புக்கெல்லாம் எங்க கிட்ட குடுத்திரு எல்லா செக்-லயும் கையெழுத்து போட்டுக்கொடுத்திடு உன் அக்கவுண்ட்ல கொஞ்ச நாள் பணம் போடுவோம் அப்புறம்... பிரச்சனையெல்லாம் முடிஞ்சதும் பணத்தை எடுத்துக்குவோம் உனக்கு வேண்டியதை செஞ்சுதருகிறேன் என்ன சொல்லுற...

இதுனால எனக்கு பிரச்சனை ஏதும் வராதே...சார்

ஒன்னும் வராது எதாவது ஒரு வகையில் கணக்கு காட்டிவிடலாம் நீ..பயப்படாம இருந்தா போதும் சுளையா இரண்டு லட்சம் உன்னால உடனே சம்பாரிக்க முடியுமா?

அரைகுறை மனதுடன் தலையாட்டினான் விஷ்ணு


விஷ்னுவை அனுப்பிவிட்டு ஜான் மீண்டும் இராஜநாயகத்தின் அறைக்குள் நுழைந்தான் ஜான்

என்னடா...ஜான் பையன் ஒத்துவருவானா  ஏமாத்திரப்போறான் பார்த்துக்க என்றார் இராஜநாயகம்

பையன் சரிப்பட்டு வருவான் தலைவரே வரல்லையின்னா....

ஜான் சொன்னதை கேட்டதும் அடப்பாவி என்னை விட மோசமானவனா இருக்க...என்றார்

...................................................................................................................................................................


இரண்டு மாதமாக விஷ்ணு சரியாக வேலைக்கு போவதே இல்லை வங்கியில் கணக்கு தொடங்கியது முதல் ஜான் இவனிடம் கனிசமான பணத்ததைக் கொடுக்கவும் ஏதேதோ கையெழுத்து வாங்குவதும் தினம் குடிக்கவும் தூங்குவதும் பொழுதுபோக்கிக்கொண்டுருந்தான்

விஷ்ணு உன்னை மலேசியா கூட்டிட்டு போலாம்ன்னு இருக்கேன் என்று ஜான் கூறியிருந்தான் 
மாலை மசங்கும் நேரத்தில் ஒரு ஆட்டோபிடித்து வழக்கமாக தண்ணியடிக்கும் APS பார்க்கு வந்தான் விஷ்ணு பேரரிடம் ஆர்டர் செய்துவிட்டு பேரர் வைத்துவிட்டு போன ஸ்னாக்ஸ்ஐ எடுத்து கொரித்துக்கொண்டுடிருந்தான் எதிரே ஒருவர் வந்து அமர்ந்தார் நல்ல உயரம் சிகப்பு நிறம் முறுக்கியமீசை திடகாத்திரமான உடல் போலிஸ் மாதிரியிருந்தார்

கரகரப்பான குரலில்
உன் பெயர் விஷ்ணுதானே... என்றார் விஷ்ணுவின் வயிற்றில் யாரோ பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது மாதிரியானது 

சா..சா..ர்...நீங்...க...

போலிஸ்தான் தம்பி ஐயாம் கோகுல்IPS சூப்பிரண்ட் ஆப் போலிஸ்
விஷ்ணுவின் காலுக்கு கீழே பூமி நழுவியது

பயப்படாதே தம்பி உனக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கேன் பாருக்கு வெளியே கடைசியில் கிரேக்கலர் போர்டு பிக்கோ நிற்க்கும் அங்க வா...இங்கே பேசமுடியாது என்று கிசுகிசுப்பாய் கூறிவிட்டு சென்றுவிட்டார்
               
பிக்கோ காரை கண்டுபிடித்து உள்ளே அமர்ந்தவுடன் கார் கிளம்பியது காரை லாவகமாய் ஓட்டிக்கொண்டே பேசினார் கோகுல் விஷ்ணு உங்களை பயன்படுத்தி இராஜநாயகமும் ஜானும் பல கோடிகளை பதுக்கி வச்சிருக்கறாங்க உங்க பேர்ல எக்ஸ்போர்ட் பிசினஸ் ஆரம்பிச்சு CC அக்கவுண்ட் ஓப்பன் பன்னி அவங்க கருப்பு பணத்த வெள்ளையாக்கிட்டு இருக்காங்க அதுமட்டும் இல்லாம போதை பொருள் கடத்தறதுன்னு உங்களை பயன்படுத்தப் பேறாங்க மாட்டுனீங்கன்னா உங்களை இவனுங்க கொன்னுடுவாங்க எப்படி இவனுககிட்ட மாட்டுனிங்க...

சார்...எனக்கு இதெல்லாம் தெரியாது

கவலைப்படாதிங்க மிஸ்டர் விஷ்ணு இதிலிருந்து தப்பிக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு  அவங்க முழுசா உங்களை நம்பிட்டாங்க இராஜநாயகம் செல்போன் சர்க்யூட் போர்டுல நுணுக்கமா ஒரு பாஸ்வெர்டை எழுதி வச்சிருக்கு அதை நீ படிச்சு எனக்கு SMS அனுப்பு உன்னை எந்த கேசும் இல்லாம பண்றது மட்டும் இல்லாம உன் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஏற்பாடு பண்ணித்தரேன்

அது என்ன பாஸ்வேர்டு சார்?

இராஜநாயகத்தின் ரகசிய வியாபாரத்தின் தகவல் அனைத்தும் உள்ள ஒரு ஹார்டுடிஸ்க் எங்களுக்கு கிடைத்து உள்ளது அதனுடைய பாஸ்வேர்டு நாங்களும் என்னென்னவெல்லாம் செய்து பார்த்துட்டோம் ஓப்பன் செய்யமுடியல பாஸ்வேர்டு செல்போன் சர்க்யூட்ல இருக்கறதா நம்பிக்ககையான இடத்திலிருந்து தகவல் வந்தது உன்னை மூன்று மாதமாக கண்காணித்துக்கொண்டு இருக்கிறேன் இப்ப உன்னை பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன்

அவர் செல் போனை எப்படி சார் எடுக்கறது எப்பவும் கையில் வச்சிருப்பாரு?

பிளான் சரியா இருந்தா எதுவும் முடியும் இராஜநாயகத்தின் செல்போன் மாதிரியே ஒன்னு தாரேன், எப்பவும் மாலை நேரத்துல வீட்ல இருப்பார், அந்த நேரத்துல எதாவது காரணத்தை சொல்லி வீட்டுக்கு போ.. அவர் அசந்த நேரமா பார்த்து இந்த செல் போனை வச்சிட்டு அத எடுத்திட்டு வந்திரு, பதட்டபடாத பயப்படாத கேசுவலா போ... காரியத்தை முடி இதை அந்த ஆளுகிட்ட சொல்லி தப்பிச்சுக்கலாக்ன்னு நினைச்சே என்கவுண்டர்ல போட்டுருவோம் ஜாக்கிறதை
என்றபடி செல்போனை கொடுத்தார் எஸ்.பி.கோகுல் 
"எண்ணய்க்கும் தீயுக்கும் நடுவே இருக்கும் எறும்பாய் தவித்தான் விஷ்ணு" 

...................................................................................................................................................................

இராஜநாயகத்தின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதனால் நன்றாக அனைவரும் பழகியுருந்ததால் ஈசியாக அவர் வீட்டுக்கு சென்றான் விஷ்ணு

வாப்பா என்ன விசயம் என்றார்

ஒன்னுமில்லை சார் சும்மா பாக்க வந்தேன்...

என்ன பணம் எதாவது வேனுமா?

அ...அ..ஆமாம் ச..ச.சார்

அதுக்கு ஏம்ப்பா தயங்குற அண்ணன்கிட்ட தயங்காம கேளு...
இரு குளிச்சுட்டு வந்து தரன் நீ டிவி பார்த்துட்டு இரு என்று செல்போன் கண்ணாடியை டேபிள் மீது வைத்து விட்டு உள்ளே போனார் அப்பா வந்த வேலை ஈசியா முடிஞ்சுதே என்று செல்போனை மாற்றி வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்தவரிடம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் விஷ்ணு செல்போனை கழற்றி சர்க்யூட் போர்டில் இருந்த பாஸ்வேர்டை குறித்துக் கொண்டு SMS அனுப்பினான் இன்னோறுவருக்கும் அனுப்பினான்




சிபிசிஐடி ஏசிபி காரித்திகேயனின் கார் சைரன் ஒலித்தபடி சைபர் கிரைம் இன்வஸ்டிகேஷன் ஸ்பெசல் ஸ்குவாட் அலுவலகம் முன் நின்றது காரில் இருந்து இறங்கியவர் பாரா போலிஸ்சின் சல்யூட்டை பெற்றுக்கொண்டு சைபர்கிரைம் இன்ஸ்பெட்டரின் அறைக்குள் நுழைந்தார் விறைப்பாக சல்யூட்டைப்போட்ட இன்ஸ்பெக்டர் முன் அமர்ந்தார்

என்னய்யா கதிரேசன் சர்ச் செஞ்சயா?

செஞ்சாச்சுங்கய்யா இதை பாருங்க A4 சீட்ல பிரிண்ட் அவுட் எடுத்த துண்டுகளை காண்பித்தார்

இது எஸ்.பி.கோகுலுக்கு விஷ்ணு அனுப்பிய SMS

Mr,கோகுல்-
S W H2 6F - இதுதான் குறியீடு கவலை வேண்டாம்
-விஷ்ணு

இது விஷ்ணு உங்களுக்கு அனுப்பிய மெயில்

sir,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்
விஷ்ணு-


கோகுல் இப்படிப்பட்ட ஆள்ன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது...
இராஜநாயகத்தின் வெளிநாட்டு வங்கிகணக்கின் பாஸ்வேர்டை செல்போனின் சர்க்யூட் போர்டுல இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அதே வங்கியில் கணக்கு ஒன்றை தன் வெளிநாட்டு நண்பர் மூலம் ஆரம்பித்து பாஸ்வேர்டை திருடி இராஜநயகத்தின் பணத்தை அந்த கணக்கில் மாற்றி விட திட்டம் போட்டுள்ளார், ஆனா..! விஷ்ணுவின் தகவலால் இப்ப மாட்டிக் கொண்டார்அதுமட்டுமல்ல இராஜநாயகத்துக்கும், ஜானுக்கும் விஷ்ணு ஒரு போலிஸ் இன்பார்மர் என்று தெரியாமல் தானே போய் வலையில் மாட்டிக்கொண்டனர் இப்ப ஜெயில்ல

அப்போது போன் அடித்தது தன்னுடைய ஐபோனை எடுத்துப் பார்த்தார் VISHNU INFORMAR என்று இருந்தது எடுத்து பேசினார்

சொல்லுங்க விஷ்ணு குட் ஜாப்

சார்.. போலிஸ் ஆகணும் என்பது என் லட்சியம் அது முடியல அதனால இப்படி போலிஸ் இன்பார்மரா இருக்கறதுல மனதிருப்தி 

கவலைப்படாதிங்க விஷ்ணு நீங்க இப்ப எங்க இருக்கீங்க 

ஹ..ஹ..ஹ..ஹ..சாரி சார் நானும் எத்தனை நாளுக்குத்தான் ஏழையாகவே இருக்கிறது.......

இராஜநாயகத்தோட வெளிநாட்டு வங்கி பணம் இப்ப என் கையில இப்ப வெளிநாட்ல இருக்கேன் இனிமே இந்த நெம்பர்ல இருந்து போன் வராது குட்பாய்.............

Read more...

"புதிய இரட்டை அடுக்கு இரயில் வண்டி இந்தியாவில்"

>> Wednesday, October 5, 2011



  
 இந்தியாவிலேயே முதன்முதலாக கொல்கத்தாவில் இரட்டை மாடி ரயில் வண்டி அறிமுகமாகியுள்ளது, இந்த வண்டி ஒன்பது பெட்டிகளைக்கொண்டது, இதில் ஆறு பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்ட கார் போன்றது, மிஞ்சியுள்ள இரண்டு பெட்டிகள் ஜெனரேட்டர்களுக்காக பயன்படுகின்றது, முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸடீல் பயன்படுத்தி பளபளவென்று வெளிநாட்டு இரயில் வண்டிகளைப்போல் தயாரித்துள்ளார்கள், அது அதிகபட்சமாக மணிக்கு 130கி.மீ.லிருந்து 160கி.மீட்டர் வரை வேகம் செல்லும், ஆனால் அனுமதியளித்திருப்பது 100லிருந்து 110வரைதான்...!

  சாதரண பெட்டிகளில் 78 நபர்கள் வரை பயனிக்கலாம் ஆனால் இதில் 128 நபர் வரை பயனிக்கலாம் என்பது சிறப்பு, மற்றும் விமானத்தில் உள்ளது போல் (கன்ட்ரோல் டிஸ்ச்சார்ஜ்) கழிவறை பயன்படுத்தியுள்ளது கிழக்கிந்தியஇரயில்வே நிர்வாகம்.

   இந்த இரயில் ஹவுராத்தில் இருந்து தன்பாத் வரை 207 கிலோமீட்டர் தூரம் வரை சனிக்கிழமையிலிருந்து நமது இரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி அவர்களால் பச்சைக்கொடி காட்டி துவக்கிவைக்கப்பட்டுள்ளது.



 அடுத்தது டில்லியிருந்து ஜெய்ப்பூர் வரை துவக்கப்பட்டுள்ளது அப்ப சரி எப்ப கொல்கத்தா போறீங்க? 

Read more...

இன்று நல்ல நாள்...

>> Tuesday, October 4, 2011





கண்ணாடி முன் கடும்
தவமிருந்தும்
முன்னூறு கவிதை
எழுதிக்கிழித்தும்...


நடக்காததை
கண் மூடி கனவு
கண்டும்
புதிதாய்
உடைகள் அணிந்தும்
பதற்றமாய்
அங்கும்..இங்கும்...
அசைபோட்டபடி
நடந்தும்...


"நீ"
ஒரு பார்வை
வீசாமல் சென்று
விட்டால்
அன்று முழுவதும்
எனக்கு மட்டும்
"அஷ்டமி"

Read more...

ஒரு ஊமையின் அறிவிப்பு(கவிதை)

>> Sunday, October 2, 2011






எல்லா பூக்களும்
உன் கூந்தல் தேசத்தை
முடிசூடிக் கொள்ளவே!
விரும்புகின்றன...


உன்னால்
முணுமுணுக்கும் பாடல்
"ஆஸ்க்கருக்காக"
எல்லா பாடல்களும்
"தமிழ்பதிவர்கள்" போல்
அடிதடியிட்டுக்கொள்கின்றன...


நீ.. கட்டிக்கெள்ளும்
சாதாரன பஞ்சு புடவையை
பார்த்து..பார்த்து...
பட்டுப்புடவை
பொறாமை கொள்கின்றது...


உன்னை தொட்டு செல்லும்
காற்று கூட மழையை!
அறிவிக்கின்றன..
நீ குடை கொண்டு மறுத்தால்
கண்ணீர் போராட்டம்
தீவிரமாக நடத்துகின்றன...


உன் இருதயம்
லேசானது என்றறிந்த
பறவையினங்கள்
தங்களின் "இறகுகளை"
உனக்கு பரிசளிக்கின்றது...


நீ.. நடக்கும் போது எழும்
கொலுசொலி...இசையை
என்ன ராகம், என்ன தாளம் என
சுவர்கள் கிசுகிசுப்பாய்
பட்டிமன்றம் நடத்துகின்றன..


"பிரபஞ்சமே" உனக்கடிமையாக
இருக்கும் போது,
என் முக்கலும்,
முனகலும்
உனக்கெப்படி தெரியும்...?
தயவுசெய்து யாராவது
இந்த "கவிதையை"
அவளுக்கு வாசித்துக்காட்டி விட்டு
செல்லுங்கள்...




Read more...

வெடி ஒரு சரவெடியா? ஊசி வெடியா?

>> Saturday, October 1, 2011



2008ல் சவுரியம் என்கின்ற தெலுங்கு ஆந்திரா ஆக்சன் திரைப்படம் காரம்,கரம் மசாலாவுடன் வெளியாகி ஆந்திரா பாபுகளை குஷி படுத்தி ஓடு....ஓடென்று..ஓடுச்சு கோபிசந்த்,அனுஸ்கா,பூனம்கவுர் அதில் நடித்து இருந்தார்கள் அதை நம்ப பங்காளி பிரபுதேவா விசாலின் அண்ணாச்சி விக்ரம் கிருஷ்ணா தயாரிப்புல இயக்கியிருக்கிறார்

நம்ம ஆளு எதற்க்கும் மெனக்கெடல அப்படியே ஈயடிச்சான் காப்பியடிச்சிருக்கிறார் என்ன ஒரிஜினல்ல ரத்தம் தெரிக்கும் இதுல கெஞ்சம் குறைச்சிட்டார் கதை பழைய அர்ஜுன் பட கதைதான் "ரவுடிஅப்பா"  இறந்தபின் சிறுகுழந்தைகளான விசால்,பூனத்தை ஊர் உதாசினப்படுத்துகின்றது! அனாதை ஆசிரமத்தில் பூனத்தை சேர்க்க தன் தங்கையே இல்லை என பொய் சொல்லுகின்றார்

விசால், அது தங்கையின் மனதில் ஆறாதவடுவை உண்டாக்குகின்றது, அதனால் அண்ணனை சந்திப்பதை தவிர்க்கிறார் தங்கை..

பெரியவன் ஆன அண்ணன் I.P.S. அதிகாரியாகின்றார்!தூத்துக்குடி ரவுடி "ஷியாசிஷிண்டே"வுடன் மோதுகின்றார் ஷியாஷியின் ஸ்டைலே தன்னை எதிர்க்கும் போலிஸ் அதிகாரிகளை அவர்களின் குடும்பத்தை வைத்து மிரட்டுகின்றார், ஆனால்! குடும்பம்குட்டியில்லாத விசாலை மிரட்டுவதற்க்கு முடியவில்லை அதனால் கைதாகின்றார்,

விசால் தன்தங்கையை தேடி கல்கத்தா செல்கின்றார் அதை தெரிந்து கொண்ட "ஷியாஷியும்" கல்கத்தா செல்கின்றார் அப்புறம் என்ன ஒரே ஆக்சன்தான்.......

விவேக் ஓரளவு சிரிக்க வைக்க முயலுகின்றார் ஆன நமக்குத்தான் முடியல.... ஒரு காட்சியில் படாதஇடத்தில் கிரிக்கெட் பால் பட்டிரும் விவேக் "அவன்இவன்" விசால் மாதிரி கரகரப்பான குரலில் பேட்டை உடைச்சிட்டியே....என்பார் நல்ல காமடி! ஆனா படம்பார்க்கும் ஏனையோருக்கு அது புரியல.. சரியா பண்ணியிருக்கலாம்

சமிரா...பெங்களுர் தக்காளி மாதிரி இருக்குது ஆனா "ஊறுகாய்" மாதிரி பயன்படுத்தியிருக்காங்க,சில காட்சிகளில் காரம்(கிளாமர்)அதிகமா... இருக்கு

"பூனம்" முகத்தில் பழைய களையில்லை விசாலின் தங்கையாக வருகிறார்

விஷால் நடிப்பு இயல்பா நடிக்கிற ஆர்வத்துல ஆக்சன குறைச்சது படத்திற்க்கு பெரிய மைனஸ், ஒரிஜனல்ல "கோபி" கலக்கியிருப்பாரு திமிரு விசால் மாதிரி, திமிரு சாயல் வரும் என்று நினைத்திருப்பார்கள் என நினைக்கிறேன்...!

படத்தின் பிளஸ் என்றால் "பாடலும்" பாடல் படமாக்கப்பட்ட விதமும் கிரேட் பிரபுதேவா, இசை "விஜய்ஆண்டனி" பின்னணி கலக்கியிருக்கிறார் முதல் பாடலில் "தேவிஸ்ரீபிரசாத்" ஆடவும் இசை யார்? என்கின்ற குழப்பம் நிலவுகின்றது..

சண்டைக்காட்சிகளில் அறிவாளில் வெட்டி இரத்தம் தெரிக்கும் காட்சியில் சட்டைக்கு உள்ளே வைத்து வெடிக்கும் "டைனமெட்டின்" கரும்புகை தெளிவாக தெரிகின்றது அதனால் கிளைமாக்ஸின் சண்டைக்காட்சி எடுபடவில்லை அனைவரின் உழைப்பு வீணாகிவிட்டது படம் ஆக்சன் பிரியர்களுக்கு டைம்பாஸ்.....

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP